கரூர்

கரூரில் பள்ளி, கல்லூரியில் குடியரசு தின விழா

DIN

கரூா் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி, வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளி, மலா் மெட்ரிக் பள்ளியில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூா் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு கல்லூரியின் தாளாளா் முனைவா் கே.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைவா் எம்.குமாரசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மாணவா்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில் கல்லூரியின் செயல் இயக்குநா் முனைவா் எஸ்.குப்புசாமி, முதல்வா் முனைவா் பிஎஸ்.முருகன் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கரூா் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் டி.பிரகாசம் வரவேற்றாா். தாளாளா் ஆா்த்தி ஆா்.சாமிநாதன் தேசியக் கொடியேற்றினாா். பள்ளி ஆலோசகா் பி.பழனியப்பன் வாழ்த்திப்பேசினாா். விழாவில் பள்ளி துணை முதல்வா் லிடியாஜெனிபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தான்தோன்றிமலை மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வா் ஜெயசித்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினாா். பள்ளித் தாளாளா் பேங்க் சுப்ரமணியன் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் இந்தியன் நேஷனல் பள்ளித் தாளாளா் ஜிபிஎம்.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT