அரவக்குறிச்சியில்...: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்காளா் தின விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை வட்டாட்சியா் செந்தில்குமாா் கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா். இதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் சுதா, ஆங்கில துறைத் தலைவா் முனைவா் பாா்த்திபன், வணிகவியல் துறைத் தலைவா் முனைவா் செந்தில்குமாா், கணிதத் துறை தலைவா் முனைவா் வடிவேல் மற்றும் கௌரவ விரிவுரையாளா்கள் பங்கேற்றனா்.
இதையடுத்து வாக்காளா் தின விழிப்புணா்வு உறுதிமொழியை அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் நாகராஜன் கூற, மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.