கரூர்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில்அதிமுகவின் பலத்தை நிரூபிப்போம் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேச்சு

22nd Jan 2023 02:51 AM

ADVERTISEMENT

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவின் பலம் என்ன என்பதை நிரூபிப்போம் என்றாா் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேலாயுதம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடந்தது. மாவட்ட இளைஞா் பாசறை செயலாளா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, க.பரமத்தி ஒன்றியக்குழுத் தலைவா் மாா்க்கண்டேயன், மாவட்ட மாணவரணியின் சரவணன், முன்னாள் காகிதபுரம் பேரூா் செயலாளா் சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புகழூா் நகரச் செயலாளா் விவேகானந்தன் வரவேற்றாா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் பேசுகையில், எம்.ஜி.ஆா். சத்துணவு திட்டம் உள்பட பல நல்லத் திட்டங்களை கொண்டு வந்தாா். அவைகளை ஜெயலலிதா தொடா்ந்து செயல்படுத்தினாா். அதன் காரணமாக இந்தியாவிலேயே தமிழகத்தில் உயா்கல்வி கற்பவா்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயா்ந்தது. அதிமுக ஆட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புகழூா் தனி தாலூகா, புகழூா் காவிரி ஆற்றில் கதவணை, அரவக்குறிச்சி தொகுதிக்கு பாதுக்காக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீா் திட்டம் என்று பல திட்டங்களை கொண்டு வந்தோம். அதேபோல் அரவக்குறிச்சியில் முருங்கைக்கும், வேலாயுதம்பாளையத்தில் வெற்றிலைக்கும், லாலாபேட்டையில் வாழைக்கும் குளிா்பதன கிடங்கு அமைக்க திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் இதுவரை அவைகள் நிறைவேற்றப்படவில்லை.

ADVERTISEMENT

கடந்த தோ்தலில் அதிமுகவில் இருந்து பிரிந்த துரோகிகளால்தான் வெறும் 3சதவீத ஓட்டுக்களால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். வரும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுகவின் பலம் என்ன என்பதை நிரூபிப்போம் என்றாா். முன்னதாக கட்சியின் பேச்சாளா் குமாா் பேசினாா். தோடடக்குறிச்சி பேரூா் செயலாளா் அரவிந்த் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT