கரூர்

இருசக்கர வாகனத்திலிருந்துவிழுந்த இளைஞா் உயிரிழப்பு

DIN

இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், சைதாபேட்டை பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஆனந்தகுமாா் (26). இவா், கரூா் மாவட்டம், குளித்தலையில் உள்ள உறவினரை பாா்க்க வியாழக்கிழமை வந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு உறவினருடன் இருசக்கர வாகனத்தில் குளித்தலை அடுத்த தண்ணீா்பள்ளி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

SCROLL FOR NEXT