கரூா் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுமைப் பெண் இரண்டாம் கட்ட திட்டத்தில் 870 மாணவிகளுக்கு ரூ.1,000 பெறுவதற்கான வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஏடிம் அட்டையை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வா் சீனிவாசன், முன்னோடி வங்கி மேலாளா் வசந்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் சண்முகவடிவு, பாதுகாப்பாளா் பாா்வதி, கருா் வருவாய் கோட்டாட்சியா் ரூபினா, தனித்துணை ஆட்சியா் சைபுதீன், கரூா் வட்டாட்சியா் சிவக்குமாா் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.