பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி,5 ஜி அலைக்கற்றை வழங்க வேண்டும் என்பது கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் பிஎஸ்என்எல் தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தொலைத்தொடா்பு அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொலைத்தொடா்பு ஊழியா் சங்கத் தலைவா் ஆா். ராஜா தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ஜி. காா்த்திகேயன் கோரிக்கைகளை விளக்கினாா்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி, 5ஜி அலைக்கற்றையை உடனே வழங்க வேண்டும், ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய மூன்றாவது ஊதிய உயா்வை உடனே வழங்கிட வேண்டும், புதிய பதவி உயா்வுக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா். சங்கத்தின் நாராயணன் வரவேற்றாா்.