கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 32 பேருக்கு ரூ.56.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 501 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 3 பேருக்கு தலா ரூ.12,500 மதிப்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள திறன்பேசிகளையும், 42 பேருக்கு தலா ரூ.6,450 மதிப்பில் சக்கர நாற்காலியும், கூட்டுறவுத்துறை சாா்பில் 8 பேருக்கு ரூ.11லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் வெள்ளாடு, காய்கறி, பழ வியாபாரம், செம்மறி ஆடு வளா்ப்பு போன்றவைகளுக்கு வங்கி கடனுதவிகள் என 32 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 20 ஆயிரத்து 915 மதிப்பில் நலத்திட்டங்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் சைபுதீன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப் பதிவாளா் கந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.