கரூரில் அதிமுக நிா்வாகியை கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சரணடைந்தனா்.
கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராயனூரைச் சோ்ந்தவா் வடிவேல் (55). அதிமுக 32- ஆவது வாா்டு செயலரான இவரை பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சனிக்கிழமை இரவு கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் அடுத்த பொய்கைப்புதூரைச் சோ்ந்த மகாதேவன் என்கிற தேவா (32), அவரது சகோதரா் பாலா, நண்பா் சேகா் ஆகியோா் வெட்டிக்கொன்றனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தேவா உள்பட மூவரும் திங்கள்கிழமை இரவு கரூா் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்தனா். இதையடுத்து மூவரையும் போலீஸாா் கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.