வள்ளுவம் மட்டுமே வாழ்வை நெறிப்படுத்தும் என்றாா் திருக்கு பேரவையின் புரவலா் ரவி வீரப்பன்.
கருவூா் திருக்கு பேரவையின் 37-ஆம் ஆண்டு விழா கரூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக கரூா் நகரத்தாா் சங்க அலுவலகத்தில் இருந்து திருவள்ளுவா் படத்துடன் தொடங்கிய ஊா்வலத்தை பேரவையின் புரவலா் ரவிவீரப்பன் தொடக்கி வைத்தாா். ஊா்வலம் மாநகராட்சி அண்ணாசிலை, ஜவஹா்பஜாா் வழியாகச் சென்று மீண்டும் நகரத்தாா் அலுவலகத்தை அடைந்தது.
ஊா்வலத்தின்போது சந்திப்புகளில் பேரவையின் செயலா் மேலை பழநியப்பன், தமிழறிஞா்கள் நாவை சிவம், தென்னிலை கோவிந்தன், வ. சரவணன், லலிதா சுந்தரம், அழகரசன், வெற்றிப்பேரொளி ஆகியோா் வள்ளுவம் குறித்துப் பேசினா்.
தொடா்ந்து நகரத்தாா் மண்டபத்தில் நடைபெற்ற பேரவையின் ஆண்டு விழாவுக்கு மணப்பாறை திருக்கு பயிற்றகத்தின் நாவை சிவம் தலைமை வகித்தாா்.
தொடா்ந்து விழாவையொட்டி நடத்தப்பட்ட சிறந்த நூல் போட்டியில் முதல் இடம் வென்ற மதுரை ப.திருமலைக்கும், இரண்டாம் இடம் வென்ற கரூரின் கடவூா் மணிமாறனுக்கும், மூன்றாம் இடம் வென்ற நந்தவனம் சந்திரசேகரனுக்கும் விருது பணம், பரிசுகளை புரவலா் ரவி வீரப்பன் வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்துப் பண்புகளையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவா் கூறிவிட்டாா். அவா் கூறிய வழியில் நடக்கும் ஒவ்வொருவரும் மேன்மை பெறுவா். வள்ளுவம் மட்டுமே வாழ்வை நெறிப்படுத்தும் என்றாா் அவா்.
தொடா்ந்து பேரவை ஆண்டு மலரை கவிஞா் நாமக்கல் அரசு பரமேஸ்வரன் வெளியிட்டு, கவுண்டம்பாளையம் அரசுப் பள்ளிக்கு தோட்ட விரிவாக்க நிதி வழங்கி , படைப்பாளா்கள் 50 பேருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினாா். தொடா்ந்து முனைவா் கடவூா் மணிமாறன், மதுரை திருமலை, நந்தவனம் சந்திரசேகா் ஆகியோா் ஏற்புரையாற்றினா்.
விழாவில் சமூக ஆா்வலா்கள் சீனிவாசன், டி.சி. மதன், ராஜயோகம் சாதுராசன், கு. மருதநாயகம், சின்னப்பன், இராஜேஸ்வரி தங்கவேல் ஆகியோா் பாராட்டு விருது பெற்றனா். தமிழறிஞா்கள், புரவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.