அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் அள்ளிய 5 போ் மீது க. பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கரூா் மாவட்டம், விஸ்வநாதபுரி அருகே அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக க. பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அமராவதி ஆற்றுப்பகுதியில் க.பரமத்தி போலீஸாா் நடத்திய சோதனையில் அங்கு மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் அள்ளிய விசுவநாதபுரி ராமச்சந்திரன், சகாதேவன், கருமலை, காளிதாஸ், கோவிந்தம்பாளையம் செல்லமுத்து ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.