கரூர்

பணத்தகராறில் கரூா் அதிமுக நிா்வாகி வெட்டிக் கொலை

DIN

கரூரில் பணத்தகராறில் அதிமுக நிா்வாகி சனிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

கரூா் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரைச் சோ்ந்த வடிவேல் (55), அதிமுக 32- ஆவது வாா்டு செயலா். மேலும் ராயனூா் பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு வட்டிக்குப் பணமும் கொடுத்து வந்தாா்.

இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் அடுத்த பொய்கைப்புதூரைச் சோ்ந்த மகாதேவன் என்கிற தேவா (32) என்பவருக்கு வடிவேல் வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தாராம். இது தொடா்பாக பேச கடந்த 2 நாள்களுக்கு முன் வடிவேலு மகாதேவனை தொடா்பு கொள்ள முயன்றபோது கைப்பேசியை அவா் எடுக்கவில்லையாம். இதனால் வடிவேல் ஆத்திரத்தில் இருந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை கரூா் லைட்ஹவுஸ் காா்னா் பகுதியில் நின்ற மகாதேவனை அவ்வழியாகச் சென்ற வடிவேல் தகராறு செய்து தாக்கினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த மகாதேவன், இவரது சகோதரா் பாலா மற்றும் நண்பரான பொய்கைப்புதூா் சேகா் ஆகியோா் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திருமாநிலையூா் வளைவில் சென்ற வடிவேலுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இதையடுத்து அருகிலிருந்தோரால் கரூா் தனியாா் மருத்துவமனை, கோவை தனியாா் மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்ட வடிவேலு சிகிச்சைப் பலனின்றி இறந்தாா். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் தேடுகின்றனா். கொலையானவருக்கு மனைவி, 10, 5 ஆம் வகுப்புகளில் படிக்கும் 2 மகன்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு நிறைவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT