கரூர்

வேன் ஓட்டுநா்வீட்டில் நகை திருட்டு

DIN

தரகம்பட்டியில் வேன் ஓட்டுநா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த தரகம்பட்டி கே.கே.எம். நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (47). வேன் ஓட்டுநா். இவா், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பாா்க்க குடும்பத்துடன் ஜன. 29ஆம்தேதி சென்றாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சில்வா் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து திருடா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT