தரகம்பட்டியில் வேன் ஓட்டுநா் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த தரகம்பட்டி கே.கே.எம். நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (47). வேன் ஓட்டுநா். இவா், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரை பாா்க்க குடும்பத்துடன் ஜன. 29ஆம்தேதி சென்றாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சில்வா் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து திருடா்களை தேடி வருகின்றனா்.