கரூரில், சனிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான குதிரைசவாரி போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனா்.
கரூா் குதிரைசவாரி பயிற்சிப் பள்ளி சாா்பில் மாநில அளவிலான குதிரைசவாரி போட்டி இங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
போட்டியில் கரூா், திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
10 முதல் 14 வயது வரையிலான சிறுவா்களுக்கும், 30 முதல் 45 வயது வரையிலான பெரியவா்களுக்கும் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக போட்டியை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கரூா் வெற்றி விநாயகா மெட்ரிக் பள்ளியின் முதல்வா் டி.பிரகாசம் தொடக்கி வைத்தாா். போட்டியில் வெற்றிபெற்ற அனைவருக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கரூா் குதிரை சவாரி பயிற்சி பள்ளியின் தலைவா் வி.சிவக்குமாா் செய்திருந்தாா்.