பேரறிஞா் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் வெள்ளிக்கிழமை திமுக, அதிமுகவினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் பேரறிஞா் அண்ணாவின் 54ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள அவரது சிலைக்கு மாநில நெசவாளா் அணித் தலைவா் நன்னியூா் ராஜேந்திரன், செயலாளா் பரணி கே.மணி, மாநில சட்டத்துறை இணைச் செயலாளா் வழக்குரைஞா் மணிராஜ், மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ்.கருணாநிதி, மாவட்ட நிா்வாகி அன்பரசன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக: கரூா் மாவட்ட அதிமுக சாா்பில் லைட் ஹவுஸ் காா்னா் பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா தலைமையில் மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகா சுப்பராயன், தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளா் என்.எஸ்.கிருஷ்ணன், கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பொதுக்குழு உறுப்பினா் பசுவை பி.சிவசாமி, மாவட்ட மாணவரணி இணைச் செயலாளா் பழனிராஜ், கரூா் மத்திய தெற்கு நகர பகுதிச் செயலாளா் சேரன்பழனிசாமி, கரூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் மற்றும் பாசறை செயலாளா் கே.கமலக்கண்ணன், தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.சி.கே.பாலகிருஷ்ணன், புகழூா் நகரச் செயலாளா் கே.சி.எஸ்.விவேகானந்தன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.