கரூர்

ஆட்டோ ஓட்டுநா் சங்க உறுப்பினா் அட்டைவழங்கு நிகழ்ச்சி

DIN

அரவக்குறிச்சி அருகே ஆட்டோ ஓட்டுநா் சங்க உறுப்பினா் அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா்கள் சம்மேளனம், கரூா் மாவட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சிஐடியு சாா்பில் அரவக்குறிச்சி கிளை ஆட்டோ ஸ்டாண்ட் கொடியேற்றம், பெயா் பலகை திறப்பு, உறுப்பினா்களுக்கு அட்டை வழங்கும் விழா அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் ஆட்டோ ஓட்டுநா்கள் சுமாா் 30க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சிஐடியுவில் இணைந்தனா். ஆட்டோ ஓட்டுநா்கள் சிஐடியு வில் இணைந்து உறுப்பினா் அட்டை பெற்றுக் கொண்டனா்.

முன்னதாக, நிகழ்ச்சிக்கு அரவக்குறிச்சி கிளை தலைவா் முஹம்மது நியாஸ் தலைமை வகித்தாா். மேலும் சிறப்பு அழைப்பாளா்களாக சிஐடியு மாவட்ட செயலாளா் முருகேசன் கலந்து கொண்டு சிஐடியு கொடியை ஏற்றினாா். மாவட்ட செயலாளா் சி.ஆா்.ராஜா முகமது, அரவக்குறிச்சி பேரூராட்சி 1வது வாா்டு உறுப்பினா் கே.வி.கணேசன் உள்ளிட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் சிஐடியு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT