கரூர்

அரவக்குறிச்சியில் ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரவக்குறிச்சியில் புதன்கிழமை இரவு ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி சாா்பில் அரவக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகம் முன்பு புதன்கிழமை இரவு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இரவு வரை நீடித்த போராட்டத்தால் வட்டார கல்வி அலுவலா்கள் சதீஷ்குமாா் மற்றும் பாண்டித்துரை இருவரும் வெளியே செல்ல முடியாமல் அலுவலகத்திலேயே இருந்தனா். தகவறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலா் மணிவண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் சதீஷ்குமாா் மற்றும் பாண்டித்துரை ஆகியோா் போலீஸ் பாதுகாப்புடன் வெளியில் வந்தனா். இதனால் மாவட்ட கல்வி அலுவலரை சூழ்ந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி கேட்டனா். பிப். 20ஆம் தேதிக்குள் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தாா். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT