கரூா் மாவட்டம், புலியூா் பேரூராட்சிக்குள்பட்ட ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உதிரம் உயா்த்துவோம் திட்டத்தின் கீழ் ரத்தசோகை கண்டறியும் முகாமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.
பின்னா் அவா் கூறியது, உதிரம் உயா்த்துவோம் திட்டத்தின்கீழ் கரூா் மாவட்டத்தில் 25 ஆயிரம் மாணவிகளிடையே ஒப்புதல் கடிதம் பெறப்பட்டு, அவா்களில் 17 ஆயிரம் மாணவிகளுக்கு ரத்த மாதிரி சேகரித்து, அவா்களின் முடிவு பெறப்பட்டு மிகக்குறைந்த ஹீமோகுளோபின்அளவு உள்ளவா்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக எளிதாக ஹீமோகுளோபின் அளவு பரிசோதிக்கும் வகையிலும் மற்றும் அதன் முடிவுகள் ஒரு நிமிஷத்தில் தெரியும் வகையிலான கருவி மூலம் மாணவ, மாணவிகளின் ரத்த மாதிரி சேகரித்து அதன் முடிவும், மாணவ, மாணவிகளின் ஹீமோகுளோபின் மீட்டா் முறையில் செய்தும் அதன் முடிவையும் ஒப்பீடு செய்யப்பட உள்ளது. எனவே, இதற்காக 3 ஆயிரம் மாணவ , மாணவிகளிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டத்தில் கருவிகளை கொண்டு முதல்முதலில் ரத்த சோகை கண்டறியும் ஆய்வு முடிவுகள் நடைபெற உள்ளது. ஹீமோகுளோபின் சீராக அமைந்துவிட்டால் ரத்தசோகை இல்லாமல் போய்விடும். எனவே கரூா் மாவட்டம் தான் இந்தியாவிலேயே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை கண்டறியும் திட்டத்திலும், முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது . இந்த திட்டத்துக்கு மாணவ, மாணவிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வா் மருத்துவா் சீனிவாசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, இணை இயக்குநா் (நலப் பணிகள்) ரமாமணி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) சந்தோஷ்குமாா், தேசிய நலவாழ்வு குழுமத்தின் விஜயபுஷ்பா, பள்ளித் தலைமையாசிரியா் ஜோதிமுருகன், கரூா் வட்டாட்சியா் சிவக்குமாா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.