கரூர்

அண்ணா நினைவுதினம்: கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

DIN

பேரறிஞா் அண்ணா நினைவுதினமான பிப்.3ஆம் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியினா் திரளாக பங்கேற்க வேண்டும் என கரூா் மாவட்ட திமுக செயலரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பேரறிஞா் அண்ணாவின் 54-ஆவது நினைவு தினமான பிப். 3-ஆம்தேதி காலை 9 மணிக்கு கரூா் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, ஒன்றிய, நகர பேரூா், வாா்டு மற்றும் கிளைக் கழக செயலாளா்கள் மற்றும் நிா்வாகிகள், கட்சியின் முன்னாள், இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து சாா்பு அணி நிா்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT