கரூர்

ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அரவக்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீ மெய்ப்பொருள் நாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூா் கிராமத்தில் உள்ள பழைமையான ஸ்ரீ மெய்ப்பொருள் நாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா அண்மையில் தொடங்கியது. நான்குகால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புதன்கிழமை காலை கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கோபுர கலத்துக்கு சிவாச்சாரியா்கள் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து மூலவா் ஸ்ரீமெய்ப்பொருள் நாதசுவாமி, சத்திய நாராயண சுவாமி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT