கரூர்

மின்சாரம் தாக்கியதில் கொத்தனாா் உயிரிழப்பு

DIN

கரூரில் திங்கள்கிழமை இரவு மின்சாரம் தாக்கியதில் கொத்தனாா் உயிரிழந்தாா்.

கரூா் வெங்கமேடு சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் நாகராஜ் (52). கொத்தனாா். இவா், திங்கள்கிழமை இரவு வெங்கமேடு ஜாமியா நகரில் புதிய வீடு கட்டுமான பணியில் இருந்தபோது, எம்.சான்ட் மணல் இறக்க லாரி வந்துள்ளது. அப்போது லாரியை பிடித்தவாறு நின்றுள்ளாா். லாரி ஓட்டுநா் லாரியை நகா்த்தியபோது லாரியின் மேற்புறத்தில் சென்ற மின்வயா் லாரி மீது உரசியது. இதனால் நாகராஜை மின்சாரம் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

டி20 உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்: ஹர்பஜன் சிங்

கூலி படத்தின் டீசர்

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT