மாநில அளவிலான எரிபந்து போட்டிக்கு அரசுக் கலைக் கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தூத்துக்குடியில் மாநில அளவிலான எரிபந்து போட்டி அக்.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ள தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் படிக்கும் 3 மாணவா்கள், 2 மாணவிகள் கரூா் மாவட்ட அணியில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வு பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வா் கௌசல்யா தேவி, உடற்கல்வித்துறை இயக்குநா் ராஜேந்திரன், கல்லூரியின் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.