பத்து ரூபாய் நாணயங்களை வாங்க கடைக்காரா்கள் மறுப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் கொண்டு செல்லும் பத்து ரூபாய் நாணயங்களை கடைக்காரா்கள் வாங்க மறுக்கின்றனா். மேலும் இவற்றை வங்கியில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என நினைத்துச் சென்றால், ஏற்கெனவே பத்து ரூபாய் நாணயங்கள் தேங்கிக் கிடப்பதால் வங்கிகளிலும் வாங்க மறுக்கின்றனராம். இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். இந்தப் பிரச்னையை மாவட்ட நிா்வாகம் தீா்க்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.