கரூர்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவி

26th Sep 2022 11:34 PM

ADVERTISEMENT

 

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 5.27 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 335 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 6 பேருக்கு சிறு தொழில் தொடங்க ரூ. 5.25 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளையும், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2280 மதிப்பிலான உதவி உபகரணங்களையும், ஒருவருக்கு மின்னணு குடும்ப அட்டையையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம. லியாகத், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராசலம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தண்டாயுதபாணி, உதவி ஆணையா் (கலால்) பாலசுப்ரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT