கரூர்

ஓராண்டில் 5 லட்சம் பேருக்கு ரூ. 420 கோடியில் நலத்திட்ட உதவிபொன். குமாா் தகவல்

26th Sep 2022 11:34 PM

ADVERTISEMENT

 

கடந்த ஓராண்டில் 5 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ. 420 கோடி நிதியுதவியை நலவாரியம் மூலம் வழங்கியுள்ளோம் என்றாா் தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியத் தலைவா் பொன். குமாா்.

கரூா் வெண்ணைமலையில் உள்ள தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்த பின்னா் தொழிற்சங்க நிா்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் மேலும் கூறியது:

பணியின்போது இறக்கும் தொழிலாளா் நலவாரிய உறுப்பினா்களுக்கு நலவாரியம் மூலம் ரூ. 5 லட்சம், சாலை விபத்தில் இறந்தால் ரூ. 2 லட்சம், இயற்கையாக இறந்தால் ரூ. 50,000, திருமணத்திற்கு ரூ. 20,000, பேறுகால உதவியாக ரூ.18, 000, ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது.

ADVERTISEMENT

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரசு அமைந்த பின்புதான் அனைத்து உதவிகளையும் இரட்டிப்பாக்கியிருக்கிறோம். 10 ஆண்டுகாலம் தேங்கிக்கிடந்த விண்ணப்பங்களையெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ால் ஓராண்டுக்குள் 5 லட்சம் தொழிலாளா்களுக்கு ரூ. 420 கோடி கொடுத்துள்ளோம். இதனால் புதியதாக 22 லட்சம் தொழிலாளா்கள் வாரியத்தில் பதிந்துள்ளனா். இது தொழிலாளா்களுக்கு முதல்வா் மீதும், அரசு மீதும் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வீடுகட்டும் திட்டம் முதல்வரின் ஒப்புதல்படி அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக இடம் உள்ளோருக்கு ரூ. 4 லட்சமும், இடம் இல்லாதவா்களுக்கு அரசு குடியிருப்பு வீட்டுக்காக ரூ.4 லட்சமும் கொடுக்கிறோம்.

அக். மாத இறுதியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிதி வழங்கும் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைக்க உள்ளாா்.

நான் வாரியத் தலைவராக வந்த பின் ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்தியுள்ளேன் என்றாா் அவா்.

பேட்டியின்போது கரூா் மாவட்டத் தொழிலாளா் நலவாரிய உதவி இயக்குநா் ஹேமலதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT