கரூர்

ஊராட்சித் தலைவரிடம் சாதி பாகுபாடு:ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

26th Sep 2022 02:54 AM

ADVERTISEMENT

 

கரூரில் பட்டியலின ஊராட்சித் தலைவரிடம் சாதிப் பாகுபாடு காட்டிய ஊராட்சி செயலரை மாவட்ட ஆட்சியா் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

கரூா் மாவட்டம், கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நன்னியூா் ஊராட்சியின் தலைவராக உள்ள திமுகவைச் சோ்ந்த சுதா, கடந்த 22-ஆம் தேதி வாங்கல் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தாா்.

அதில் ஊராட்சித் தலைவரான தன்னை ஊராட்சி செயலா் நளினி, அவரது கணவா் மூா்த்தி, முன்னாள் ஊராட்சித் தலைவா் குமாரசாமி, 9-ஆவது வாா்டு உறுப்பினா் நல்லுசாமி ஆகியோா் சாதி பெயரைச் சொல்லி இழிவாக நடத்துகிறாா்கள்; மேலும் ஊராட்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் குறுக்கிடுகிறாா்கள். எனவே அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாா் அளித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப்பதிந்த நிலையில் இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா் சனிக்கிழமை மாலை நடத்திய விசாரணையில் ஊராட்சி செயலா் சாதிப் பாகுபாடு காட்டியது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT