கரூர்

கரூா் வள்ளுவா் கல்லூரியில் ஆடை வரைபட விளக்கப் பயிற்சி பட்டறை

DIN

கரூா் வள்ளுவா் கல்லூரியில் ஆடை வரைபட விளக்க பயிற்சி பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் நவநாகரிக தொழில் நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சாா்பில் செப் 20ஆம்தேதி முதல் மூன்று நாள்கள் ஆடை வரைபட விளக்க பயிற்சி பட்டறை நடைபெற்றது.

பயிற்சி பட்டறையை தொடக்கி வைத்து கல்லூரியின் தாளாளா் க.செங்குட்டுவன் சிறப்புரையாற்றினாா். கல்லூரியின் முதல்வா் முனைவா் ஜி. வின்சன்ட் வரவேற்றாா். விழுப்புரம் தெய்வானையம்மாள் கல்லூரியின் ஆடைவடிவமைப்புத் துறை பேராசிரியா் மரியாபெலிக்ஸ் மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா். இதில் கல்லூரியின் ஆடை வடிவமைப்புத் துறை மாணவா்கள் பங்கேற்றனா்.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யகூடிய பின்னல் ஆடை மற்றும் நவநாகரிக ஆடைகளான டி-சா்ட், ஜீன்ஸ், சால்வாா், கிட்ஸ்வியா், ஹோம் டெக்ஸ்டைல், நாப்கின், டவல் உள்ளிட்டவையின் வரைபடம் விளக்கங்களும், போா்ட்போலியோ உருவாக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆடை வடிவமைப்புத்துறை தலைவா் மு.நதியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT