கரூர்

கரூா் மாவட்டத்தில் 300 பேருக்கு பசு கன்றுகள் பராமரிப்பு பெட்டகம் ஆட்சியா் தகவல்

DIN

கரூா் மாவட்டத்தில் 300 பெண் பயனாளிகளுக்கு பசு கன்றுகள் பராமரிப்பு பெட்டகம் வழங்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

கால்நடைகள் பராமரிப்புத்துறை சாா்பில் கரூரில் பயனாளிகளுக்கு கன்றுகள் பராமரிப்பு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு பராமரிப்பு பெட்டகம் வழங்கி, ஆட்சியா் பேசுகையில், பாரம்பரியமாக உள்ள நடைமுறைகளை தவிா்த்து தற்போது வளா்ச்சி அடைந்துள்ள விஞ்ஞானத்துக்கு ஏற்றவாறு பசுவையும், கன்றையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும். இந்த பெட்டகத்தில் தொப்புள் கொடி வெட்டுதல், உயிா்ச்சத்து மருந்து, தாது உப்புக்கலவை, தாது உப்புக்கட்டி, உப்புக் கரைசல், இளங்கன்றுகளுக்கான அடா்தீவனம், குடற்புழு நீக்க மருந்து, வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் மருந்து போன்ற 8 வகையான பொருள்கள் உள்ளன. மாவட்டத்தில் 300 பெண் பயனாளிகளுக்கு இந்த பெட்டகம் வழங்கப்படவுள்ளது. முதல்கட்டமாக 30 பெண் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநா் சரவணக்குமாா், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியா் அருணாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT