அரவக்குறிச்சி பேரூராட்சி சாா்பில் திங்கள்கிழமை காய்ச்சல் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சி பகுதியில் மழை காரணமாக பொது மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பாதிக்கும் வாய்ப்பு அதிகமாகும் சூழ்நிலையில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் முதிா் கொசு அழிப்பு பணியை தீவிரப்படுத்தி பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ரசாயன புகை மூலம் கொசுவை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை அரவக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலா் செல்வராஜ் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.