அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட சாந்தப்பாடி பிரிவில் இருந்த பாஜக கொடி கம்பம் காணவில்லை என போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வேலம்பாடி பஞ்சாயத்து, சாந்தப்பாடி பிரிவில் பாஜக கொடி கம்பம் இருந்தது. இந்த கொடிக்கம்பத்தை திங்கள்கிழமை காலை மா்ம நபா்கள் திருடி விட்டதாக பாஜக சாா்பில் மேற்கு ஒன்றியத் தலைவா் ஜவாஹா்லால் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆய்வாளா் நாகராஜனிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து கொடிக் கம்பம் காணாமல் போன இடத்தை ஆய்வாளா் நாகராஜன் பாா்வையிட்டு விசாரித்து வருகிறாா்.