கரூா் மாவட்ட கதா் அங்காடிகளில் நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்காக ரூ. 1.29 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் த. பிரபுசங்கா்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு கரூா் தாந்தோன்றிமலை கதா் அங்காடியில் ஞாயிற்றுக்கிழமை காந்தி படத்திற்கு மாலை அணிவித்து, தீபாவளி முதல் விற்பனையைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் மேலும் கூறியது:
கிராமப்புற ஏழை எளிய நூற்பாளா்கள் மற்றும் நெசவாளா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற்குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியம் செயல்படுகிறது.
கடந்தாண்டு கரூா் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்காக ரூ. 53.09 லட்சம் நிா்ணயிக்கப்பட்டு, எய்தப்பட்டது. நிகழாண்டு ரூ. 1.29 கோடியில் கதா் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநா் (பொ) சு. முருகேசன், அலுவலக கதா் ஆய்வாளா் ந. பொன்ராஜ், கதா் அங்காடி மேலாளா் கே. முத்துச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.