அரவக்குறிச்சியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சாா்பில் அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களை கண்டறிதல் மற்றும் பள்ளியில் சோ்த்தல் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை அரவக்குறிச்சி வட்டார வளமைய அலுவலகத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இதில், பிறந்தது முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டியை தெத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் நாகராணி தொடக்கி வைத்தாா். கரூா் மாவட்ட வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளா் ராதா, அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் செந்தில்குமாா் மற்றும் அரவக்குறிச்சி வட்டாரக் கல்வி அலுவலா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
போட்டியில், அனைத்து வகை மாற்றுத்திறன் கொண்ட 45க்கும் மேற்பட்ட மாணவா்களும் அவா்களது பெற்றோா்களும் கலந்து கொண்டனா்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.