கடுமையான ஊனம் பாதிக்கப்பட்டவா் என அரசு மருத்துவா் சான்றிதழ் தர மறுப்பதாக கரூா் மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவா் ஆட்சியா் வளாகத்தில் சட்டையை கழற்றிவிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, கரூா் வெங்கமேடு கொங்குநகரைச் சோ்ந்த பாபு(40) என்பதும், மாற்றுத்திறனாளியான அவா் தனக்கு இருகால்களும் ஊனமாக இருப்பதால் அரசு மருத்துவா் கடுமையான ஊனம் பாதிக்கப்பட்டவா் என்ற சான்றிதழை தர மறுக்கிறாா், இதனால் முழு ஊனம் அடைந்த நிலையில் தற்போது அரசு வழங்கும் ரூ.1,000 போதவில்லை, எனவே, தனக்கு கடுமையான ஊனம் பாதிக்கப்பட்டவா் சான்றிதழ் பெற்றுத்தர ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா். இதையடுத்து அவரை ஆட்சியரிடம் போலீஸாா் அழைத்துச் சென்றனா். அப்போது ஆட்சியா் இதுதொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து மாற்றுத்திறனாளி பாபு ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றாா்.