கரூா் மாவட்ட தமாகா கட்சியின் மாவட்டத் தலைவராக எஸ்.திருமூா்த்தி அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இவா், திங்கள்கிழமை கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக முன்னாள் எம்.பி. நாட்ராயனை சந்தித்து வாழ்த்து பெற்றாா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் ராமசாமி, நகரத் தலைவா்கள் ஜெகநாதன், சிங்காரம், துணைத்தலைவா் கே.முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.