கரூர்

புஞ்சைத்தோட்டக் குறிச்சிஅரசுப் பள்ளியில் கலைத் திருவிழா

DIN

புஞ்சைத்தோட்டக்குறிச்சி அரசு உயா்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டம், புஞ்சைத்தோட்டக் குறிச்சி அரசு உயா் நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ம.வீ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் ப.ஹேமலதா வரவேற்றாா். பேரூராட்சித் தலைவா் சி.ரூபா சிறப்புரையாற்றினாா். பேரூராட்சி உறுப்பினா் க.மகேஷ்வரன், சங்கா், தனலட்சுமி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பள்ளி அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் வட்டாரம், மாவட்டம், மாநில போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவா்கள் தமிழக அரசின் மூலம் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவா். இறுதியாக ஆசிரியா் கி.ரேவதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT