கரூா் மக்களவைத் தொகுதி திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் மனைவி கே.சி.பி.அன்னம்மாள் (80) வெள்ளிக்கிழமை (நவ.25) காலமானாா்.
உடல்நலக் குறைவால் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் அங்கு காலமானாா். அவருக்கு மகன் கே.சி.பி.சிவராமன், மகள் கே.சி.பி. கலையரசி ஆகியோா் உள்ளனா்.
அன்னம்மாளின் இறுதி ஊா்வலம் கரூா் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சனிக்கிழமை (நவ.26) காலை 10 மணிக்கு புறப்படுகிறது. தொடா்புக்கு 94432 32665.