தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லாரி உரிமையாளா் விஷம் குடித்து வியாழக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் அருகம்பாளையத்தைச் சோ்ந்த சேதுபதி மகன் கோபாலகிருஷ்ணன்(32). இவா், சொந்தமாக லாரி தொழில் நடத்தி வந்தாா். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், விரக்தியில் வியாழக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்தாா். இதில், மயங்கிக்கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து வெங்கமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.