கரூர்

சின்னதாராபுரம் அருகே இளைஞா் தீக்குளித்து தற்கொலை

DIN

சின்னதாராபுரம் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் வியாழக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள டி.வெங்கடாபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் உதயபிரகாஷ் (26). இவரது மனைவி ரோகினி (20). செந்தில்குமாா் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், உதயபிரகாஷ் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளாா். இதில், விரக்தியடைந்த உதயபிரகாஷ் தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உதயபிரகாஷ் உயிரிழந்தாா். சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT