கரூர்

திருக்காம்புலியூா் அங்கன்வாடிமையத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

திருக்காம்புலியூா் அங்கன்வாடி மையத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட திருக்காம்புலியூா் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்த சிறப்பு முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிவது குறித்து சிறப்பு முகாமை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அண்மையில் முதல்வா் தொடக்கி வைத்தாா். அதனடிப்படையில், கரூா் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இம்முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் 3 போ்களில் ஒரு மருத்துவருடன் கொண்ட 16 குழுக்கள் நியமிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை மற்றும் சுகாதாரத்துறை பணியாளா்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஜூன் 21-ஆம்தேதி வரை நடைபெறும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் நாகலட்சுமி, பள்ளி சிறாா்களின் உடல் நலம் காணும் மருத்துவ அலுவலா் சுரேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT