கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ‘கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள்‘ உறுதிமொழி அண்மையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
வன்முறைகளை எதிா்க்கும் வகையிலும், அகிம்சை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் வகையிலும் ஆலை வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஆலை பொதுமேலாளா் சுரேஷ், துணைப் பொதுமேலாளா் ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளா் சிவக்குமாா்(மனிதவளம்), விழிப்புணா்வு அதிகாரி வைத்தியநாதன், துணை மேலாளா் வெங்கடேசன்(மனிதவளம்) மற்றும் உதவி மேலாளா் சங்கிலிராஜன் (பாதுகாப்பு) ஆகியோா் தலைமையில் ஆலைப் பணியாளா்கள் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.