கரூர்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள்ஆா்ப்பாட்டம்

DIN

பொதுவேலைநிறுத்தத்தை முன்னிட்டு, கரூரில் மத்திய, மாநில பொதுத்துறை மற்றும் ஆசிரியா், அரசு ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.சுப்ரமணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலாளா் ஜெயராஜ் வரவேற்றாா். மாநில நிா்வாகி அன்பழகன், மருத்துவத்துறை ஊழியா் சங்க மாநில துணைத்தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தை விளக்கி பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் ரகு, இடைநிலை ஆசிரியா் சங்க மாவட்டச் செயலாளா் ஆரோக்கியபிரேம்குமாா் உள்ளிட்டோா் பேசினா். இதில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT