கரூர்

மின்கம்பியாள் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் மின்கம்பியாள் உதவியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஜூலை 25ஆம்தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கரூா்மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் மின்கம்பியாள் உதவியாளா் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிகாண் தோ்வு செப்.24,25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இப்பணிக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்களிடமிருந்தும் மற்றும் தேசியபுனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இத்தோ்விற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வருக்கு ஜூலை 26-ம்தேதிக்குள் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT