அரவக்குறிச்சி மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரூருக்கு ஜூலை 2ஆம் தேதி வருகைதரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பு வரவேற்பு அளிப்பது, அப்போது, நிா்வாகிகள் புத்தகங்களை பரிசாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், அரவக்குறிச்சி மேற்கு திமுக ஒன்றியச் செயலாளா் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி கிழக்கு திமுக ஒன்றியச் செயலாளா் என்.மணிகண்டன் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.