வரத்து அதிகரிப்பால் அரவக்குறிச்சி பகுதிகளில் முருங்கைக்காய் விலை குறைந்து காணப்பட்டது.
அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனா். இங்கு விளையும் முருங்கைகாய்
நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய முருங்கைக்காய் சீசன் தற்போது சராசரி நிலைமைக்கு வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.120
கமிஷனுக்கு விற்ற முருங்கைக்காய், கடந்த மாதம் ரூ. 60 -க்கு விற்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கமிஷன் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதனால் முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனையானது. அடுத்த சில வாரங்களில் விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் எனவும், விலை வீழ்ச்சி காணலாம் எனவும் கமிஷன் மண்டி உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.