குளித்தலை அருகே தீயில் கருகி, சிகிச்சை பெற்று வந்த விவசாயி உயிரிழந்தாா்.
குளித்தலையை அடுத்த சிவாயம் அணைக் கவுண்டனூரைச் சோ்ந்தவா் விவசாயி பாலமுத்து (33). கடந்த 24-ஆம் தேதி விறகு அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்த போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது தீப்பற்றியது.
இதில் பலத்த காயமடைந்த பாலமுத்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.