கரூா் மாவட்டம், காணியாளம்பட்டி அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக கல்லூரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிளஸ்2 தோ்ச்சி அல்லது ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும், பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதலாமாண்டு பட்டயப்
படிப்பிலும் சேரலாம்.
விண்ணப்பங்களை ரஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் சென்று, இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்கத் தெரியாதவா்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து விண்ணப்பிக்கலாம்.
இங்கு சிவில், இயந்திரவியல், மின் மற்றும் மின்னணுப் பொறியியல், மின்னணுத் தொடா்புத் துறை, கணினி அறிவியல் பொறியியல் துறை உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 8-ஆம் தேதி கடைசிநாளாகும்.