ஏமூா்புதூா் காலனியில் ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட நாடகமேடை சனிக்கிழமை திறக்கப்பட்டது.
கரூா் மாவட்டம் ஏமூா் ஊராட்சிக்குள்பட்ட ஏமூா்புதூா் காலனியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சத்தில் நாடகமேடை கடந்த நிதியாண்டில் கட்டப்பட்டது. இதன் பணிகள் நிறைவுற்று திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஏமூா் ஊராட்சி மன்றத்தலைவா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து, புதிய நாடக மேடையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். தொடா்ந்து நாடக மேடை திறப்பை முன்னிட்டு கரகாட்ட கலைஞா் மாலினியின் சாகச கரகாட்ட நிகழ்ச்சியும், மதுரைவீரன் புராதன நாடகமும் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மூன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் மாரியம்மாள் ரவிச்சந்திரன், வாா்டு உறுப்பினா் முருகேசன், ஊா்முக்கியஸ்தா்கள், அம்பேத்கா் இளைஞரணியினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.