கரூர்

கரூரில் மாநகரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

15th Jun 2022 11:27 PM

ADVERTISEMENT

கரூா் மாநகரில் இன்று (வியாழக்கிழமை) மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை நடைபெறவுள்ளதால் அந்தந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆண்டான்கோவில், அம்மன் நகா், ராசி நகா், மகாத்மா நகா், கரட்டுப்பாளையத்திலும், எஸ்.வெள்ளாளப்பட்டி துணை மின் நிலையத்திற்குள்பட்ட ஆசிரியா் காலனி, நரிகட்டியூா், வெள்ளாளப்பட்டி, போக்குவரத்து நகா், தில்லைநகா், மேலப்பாளையம், சனப்பிரட்டி, குமரன் குடில், சிட்கோ, ஆசிரியா் காலனியும், புலியூா் துணை மின் நிலையத்திற்குள்பட்ட சின்னகிணத்துப்பட்டி, மேலம்பட்டி, குண்டாங்கல்பட்டி, லட்சுமணம்பட்டி, குப்பகவுண்டனூா், வடுகப்பட்டி, காளியப்பகவுண்டன்பட்டி, கேபி குளம், நத்தமேடு, மணவாசி, வளையல்காரன்புதூா், மதுக்கரை, பூஞ்சோலைபுதூா், கருப்பூா், ராசபட்டியான்புதூா், புதுகஞ்சமனூா், வேலாயுதம்பாளையம், முதுதாக்கல்பட்டி, செல்லாண்டிபட்டி, கஞ்சமனூா், உப்பிடமங்கலம், பழையரெங்கபாளையம், புது ரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

ADVERTISEMENT
ADVERTISEMENT