அரவக்குறிச்சி அருகே வேன் மோதியதில் மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழந்தாா்.
திருச்செந்தூரில் இருந்து பரமத்திவேலூா் சென்று கொண்டிருந்த வேன் அரவக்குறிச்சி அருகே செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற மனநலம் பாதிக்கப்பட்டவா் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இறந்தவா் சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவா் ஆவாா். இதுகுறித்து அரவக்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் கவிதா அளித்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.