கரூரில், போதை மருந்து விழிப்புணா்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
அகில உலக போதை மருந்துகளின் தீய பயன்பாடு எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை சாா்பில் பேருந்துநிலையத்தில் நடைபெற்ற போதை மருத்துகளின் தீய பயன்பாடு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கோட்ட கலால் அலுவலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். முகாமில், பொதுமக்களிடம் போதை மருந்துகளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.