கரூா் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் எருது விடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக எருது விடும் விழா இக்கிராமத்தில் நடத்தப்படாமல் இருந்தது. நிகழாண்டில் தொற்றுப் பாதிப்பு குறைந்த நிலையில், எருது விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை தோரணக்கல்பட்டியிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னா், விழா தொடங்கியது. விழாவில் ஏராளமான எருதுகள் விடப்பட்டன. பொதுமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.